இந்தோனேசியா மசூதியில் பயங்கர தீ விபத்து: இடிந்து விழுந்த பிரம்மாண்ட குவிமாடம்
இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தைத் தொடர்ந்து அதன் ராட்சத குவிமாடம் இடிந்து விழுந்தது.
புகை மற்றும் தூசியின் நடுவே மசூதியின் குவிமாடம் இடிந்து விழும் பதறவைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் கிராண்டு மசூதியில் (Jakarta Islamic Centre Grand Mosque) பெரும் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அதன் பிரம்மாண்ட குவிமாடம் புதன்கிழமை இடிந்து விழுந்தது.
இடிந்து சரிவதற்கு முன், சாம்பல் நிறைந்த குவிமாடத்திலிருந்து தீப்பிழம்புகள் வெளியே வருவதையும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதையும் ஆந்த காட்சிகள் காட்டுகிறது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதைச் சமாளிப்பதற்கு குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் இந்தோனேசிய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மசூதிக்குள் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை, அதனை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
சம்பவம் நடந்தபோது, கிராண்டு மசூதி புனரமைப்புக்கு உட்பட்டு, சாரக்கட்டுகளால் சூழப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கர சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
The giant dome of the Jakarta Islamic Centre Grand Mosque in Indonesia has collapsed after a major fire broke out.
— CBS News (@CBSNews) October 19, 2022
Officials say there were no victims. pic.twitter.com/1HfypNJcAt
கல்வி, வணிக மற்றும் ஆராய்ச்சி வசதிகளுடன் ஒரு வளாகத்தில் அமைந்துள்ள இந்த மசூதி, 20 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 2002-ல் தீப்பிடித்தது. அந்த நேரத்தில் தீயை அணைக்க ஐந்து மணிநேரம் ஆனதாக கூறப்படுகிறது.