சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா - பேரிழப்பை சந்திக்க உள்ள பாகிஸ்தான்

Pakistan India
By Karthikraja Apr 24, 2025 08:40 AM GMT
Report

சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன, அதை இந்தியா நிறுத்தி வைப்பதால் பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதல்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின்(CCS ) கூட்டம் கூட்டப்பட்டது. 

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா - பேரிழப்பை சந்திக்க உள்ள பாகிஸ்தான் | If India Stop Indus Water What Impact For Pakistan

இந்த கூட்டத்தில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூடுவது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே, சிந்து நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆகும். 

சிந்து நதி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டது.

இதனையடுத்து, ஐநாவின் பரிந்துரைப்படி, 1954 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உலக வங்கி உருவாக்கியது.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து, 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி, அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டனர். 

Indus Waters Treaty - சிந்து நதி நீர் ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தப்படி, இந்தியா, பாகிஸ்தான் இடையில் பாயும் சிந்து, செனாப், ஜீலம், பீஸ், ரவி மற்றும் சட்லஜ் என்ற 6 நதிகளின் நீரை பகிர்ந்துகொள்ளும் விதிகள் வகுக்கப்பட்டன.

இந்த ஒப்பந்தப்படி, கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் மீது இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு ஆறுகள் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன. 

பஹல்காம் தாக்குதல்; சுற்றுலா பயணிகளை காப்பாற்ற உயிர் நீத்த இஸ்லாமிய தொழிலாளி

பஹல்காம் தாக்குதல்; சுற்றுலா பயணிகளை காப்பாற்ற உயிர் நீத்த இஸ்லாமிய தொழிலாளி

மேற்கு ஆறுகளை உள்நாட்டு பயன்பாடு, விவசாயம் மற்றும் நீர்மின் உற்பத்தி போன்ற வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக குறிப்பிட்ட அளவு பயன்படுத்தஇந்தியாவிற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

என்ன பாதிப்பு?

காரணம் சிந்து நதி நீர் பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், அதாவது 90% விவசாய நிலங்கள் சிந்து நதி நீரையே நம்பியுள்ளது. 

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய இந்தியா - பேரிழப்பை சந்திக்க உள்ள பாகிஸ்தான் | If India Stop Indus Water What Impact For Pakistan

கராச்சி, லாகூர், முல்தான் ஆகிய முக்கிய நகரங்கள் சிந்து நதியில் இருந்து தனது தேவைகளுக்கு நேரடியாக நீரை பெறுகின்றன. தர்பேலா, மங்க்லா ஆகிய நீர் மின் திட்டங்களுக்கான, தடையற்ற நீர் சேவையை சிந்து நதியில் இருந்து தான் கிடைக்கிறது.

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தினால், பாகிஸ்தானின் உணவு உற்பத்தி பாதிக்கப்படும். மேலும் குடிநீர் உட்பட அடிப்படை நீர் தேவைகள் பாதிக்கப்படும்.

அதை தொடர்ந்து, நீர் மின் திட்டங்களின் மின்சார உற்பத்தி தடைபட்டால், குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளின் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கும்.

இதன் காரணமாக, விவசாயம், நீர், மின்சாரம் என மொத்தமாக தடைப்பட்டு பாகிஸ்தான் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US