ஆப்கானிஸ்தானிடம் நியூசிலாந்து தோற்றால்.. யாராலும் இதை தடுக்க முடியாது! சோயிப் அக்தர் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தை தோற்கடித்தால், அது சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சோயிப் அக்தர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது, இந்திய இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றும், அவர்களை நாங்கள் (பாகிஸ்தான்) மீண்டும் தோற்கடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இந்தியாவின் தலைவிதி இப்போது நியூசிலாந்தின் கைகளில் உள்ளது.
நியூசிலாந்து ஆப்கானிஸ்தானிடம் தோற்றால் நிறைய கேள்விகள் எழும் என நான் முன்கூட்டியே எச்சரிக்கிறேன்.
இது இன்னொரு ட்ரெண்டிங் டாபிக்காக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.
நான் எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பவில்லை ஆனால் நியூசிலாந்தை பொறுத்த வரையில் பாகிஸ்தானியர்களின் ஆதரவு தற்போது மிக அதிகமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானை விட நியூசிலாந்து சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.
World Cup becomes very interesting. It seems like India is heading closer to the miracle which looked impossible.
— Shoaib Akhtar (@shoaib100mph) November 5, 2021
New Zealand will be under a lot of pressure against Afghanistan. It will be a virtual quarter final for them.
Full video: https://t.co/OTfprrwjZi pic.twitter.com/syzyk5BSVD
கடவுளின் செயலால், அவர்கள் (நியூசிலாந்து) மோசமாக விளையாடி தோற்றால், அது ஒரு பிரச்சனையாகும்.
அது நடந்தால் சமூக ஊடகங்களை யாராலும் தடுக்க முடியாது, அதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.