உயிர் பயத்தில் ரஷ்ய ஜனாதிபதி புடின்: உயிர் அச்சத்தின் விளைவாக தொடரும் உக்ரைன் போர்
உக்ரைனுடனான போரில் தோற்றால் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தின் விளைவாக ஜனாதிபதி புடின் தொடர்ந்து போரை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ரஷ்ய படைகளின் பின்னடைவு
உக்ரைனில் போர் புரிந்து வரும் ரஷ்ய படைகள் மனசோர்வு மற்றும் ஆயுத பற்றாக்குறை அதிகமாக சந்தித்து வருவதால், நகரங்களை கைப்பற்றுவதற்காக பதிலாக போரின் ஆரம்ப நாட்களில் கைப்பற்றிய இடங்களையும் உக்ரைனிய படைகளிடம் இழந்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷ்யாவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட கெர்சன் பகுதிகளை கூட ரஷ்ய படைகள் சமீபத்திய நாட்களில் இழந்துள்ளனர்.
Ukrainian Military Forces - உக்ரேனிய இராணுவப் படைகள்( Getty Images)
ரஷ்ய படைகளின் இந்த சங்கடமான தோல்விகள் தொடர்ந்தால், அது ரஷ்யாவின் மிகப்பெரிய தோல்வி மற்றும் பயங்கரமான ஆட்சியின் முடிவை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிர் பயத்தில் புடின்
உக்ரைனில் நடைபெற்று வரும் ரத்தக்களரியான போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகள் தோல்வியடைந்தால், ஜனாதிபதி புடின் கிரெம்ளினில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு கொல்லப்படுவார் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உக்ரேனிய ஆலோசகர் Oleksiy Arestovich தி டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த தகவலில், புடின் மிகவும் பயப்படுகிறார், ஏனென்றால் போர்களில் தோல்வியடையும் ஜார்களுக்கு மன்னிப்பு இல்லை, எனவே உக்ரைன் மீதான போரை நிறுத்தாமல் நடத்தி வருகிறார்.
Vladimir Putin - விளாடிமிர் புடின்( SPUTNIK/AFP via Getty Images)
அவர் போரில் தோற்றால் ரஷ்யர்களின் மனதில் இருந்து விரட்டப்பட்டு கொல்லப்படுவோம் என்ற அச்சத்தில் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
கெர்சனில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து புடின் ஏற்கனவே முன்னாள் விசுவாசிகள் மத்தியில் அதிருப்தியை எதிர்கொண்டார்.
அவரது மிருகத்தனமான பாதுகாப்பு சேவைகள் கூட தங்கள் தலைவருடன் வெறுப்படைந்து உள்ளன என்ற தகவலும் வெளிவந்துள்ளது.