பிரித்தானியாவில் நாய் உரிமையாளர்கள் சிறை செல்ல நேரிடும்: எச்சரிக்கும் விலங்கு நல அமைப்பு
பிரித்தானியாவில் நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு மாமிச உணவை தவிர்த்து சைவ உணவுக்கு பழக்குவது குற்றம் என விலங்கு நல அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நாய்களை வளர்க்கும் மக்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதுடன் 20,000 பவுண்டுகள் வரையில் பிழை செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
செல்லப்பிராணிகளுக்கு மாமிச உணவை தவிர்ப்பது என்பது விலங்குகள் நலச் சட்டம் 2006 ஐ மீறுவதாகும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு பொருத்தமான உணவு கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது, இறைச்சி இல்லாத உணவு செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்பட்டதை நிபுணர்கள் தரப்பு உறுதி செய்தால், உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப ஆண்டுகளாக பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு சைவ உணவை பழக்கமாக வைத்திருப்பதை பெருமையாக கருதுகின்றனர்.
பூமியை காப்பாற்றுவதாக கூறி பெரும்பாலான மக்கள் தற்போது மாமிச உணவு இல்லாத வாழ்க்கையை வாழத்தொடங்கியுள்ளனர். ஆனால், தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிய உணவை அளிக்க மறுத்தால் அது குற்றம் என Blue Cross அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் உரிமையாளர்கள் 51 வாரங்கள் வரையில் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும், 20,000 பவுண்டுகள் அளவுக்கு பெருந்தொகை பிழையாக செலுத்தும் நிலையும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது Blue Cross.
மேலும், இனிமேல் அவர்கள் செல்லப்பிராணிகளை வளர்க்க முடியாமல் போகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.