இரகசிய காதலியைக் காட்டுக்குள் மறைத்து வைத்துள்ள புடின்: காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்...
தன் இரகசிய காதலிக்காக காட்டையே வளைத்துப்போட்டிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின். யாராவது அந்த காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதானாம்...
13 ஆண்டுகளாக பெண் ஒருவருடன் இரகசிய தொடர்பிலிருக்கும் புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின், தடகள வீராங்கனையான அலீனா (Alina Kabaeva) என்னும் பெண்ணுடன் 13 ஆண்டுகளாக இரகசிய தொடர்பிலிருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை புடினும் சரி, அலீனாவும் சரி அந்த விடயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதே இல்லை.
சமீபத்தில் அலீனா குறித்த விடயங்கள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, ஒரு விடயத்தைக் கூட இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாதா என தனது பாதுகாவலர்களிடம் தாம் தூமென குதித்தாராம் புடின். இதற்கு முன் வேறு எந்த விடயத்துக்காகவும் புடின் இவ்வளவு கோபப்பட்டதில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
காட்டுக்குள் காதலியை மறைத்துவைத்திருக்கும் புடின்
இந்நிலையில், காடு ஒன்றில் கட்டப்பட்டுள்ள மாளிகையில் தன் இரகசியக் காதலியான அலீனாவையும், பிள்ளைகளையும் புடின் மறைத்து வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Valdai ஏரி என்னும் ஏரி, மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியில்தான் அந்த இரகசிய மாளிகை உள்ளது. அதில், கோல்ஃப் மைதானம், ஒரு தியேட்டர், மினி கேசினோ, ஸ்பா என பல வசதிகள் உள்ளனவாம்.
Credit: Navalny website
காட்டுக்குள் நுழைந்தால் அவ்வளவுதான்
இதற்கிடையில், அந்த மாளிகை அமைந்துள்ள ஏரி மற்றும் வனப்பகுதிகளில் ஒரு பகுதி தற்போது பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
யாராவது அத்துமீறி அந்த பகுதிக்குள் நுழைந்தால், அவர்கள் லேபர் கேம்ப் என்னும் கட்டாய தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், அவர்களுக்கு 5,300 பவுண்டுகள் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் காரணங்களுக்காகத்தான் இந்த உத்தரவு என கூறப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை, இந்த நடவடிக்கை, தனது காதலியுடன் புடின் தங்கும் வீட்டை மற்றவர்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பதற்காகத்தான் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்!
Credit: East2West