Microsoft Windows தலைவராக IIT Madras பட்டதாரி., தலைமை பொறுப்பில் மற்றொரு இந்திய வம்சாவளியினர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கருக்கு Microsoft நிறுவனத்தில் மிகமுக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் பட்டதாரியான பவன் தவுலூரி (Pavan Davuluri) Microsoft Windows மற்றும் Surface-ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலத்தில் இத்துறையின் தலைவராக இருந்த பனோஸ் பனாய்க்குப் பதிலாக பவன் தவுலூரி புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.
அமேசான் நிறுவனத்தில் சேர கடந்த ஆண்டு மைக்ரோசாப்டின் விண்டோஸ் தலைவர் பதவியில் இருந்து பனாய் விலகினார்.
பவன் தவுலூரியின் நியமனம் குறித்து மைக்ரோசாப்ட் சாதனங்களின் அனுபவத் தலைவர் ராஜேஷ் ஜா தெரிவித்தார்.
ஜாவின் மேற்பார்வையில் விண்டோஸ் மற்றும் சர்ஃபேஸ் அணிகளை பவன் தவுலூரி வழிநடத்த உள்ளார்.
AI, Silicon மற்றும் அனுபவங்களில் AI குழுவுடன் விண்டோஸ் குழு இணைந்து செயல்படும் என்று ஜா கூறினார்.
குப்பையை கோடிகளாக மற்றும் இளைஞர்., அரசுப் பள்ளியில் படித்தவர்., மூன்றே வருடத்தில் 300 கோடிக்கு வியாபாரம்
பவன் தவுலூரி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 23 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் எம்எஸ் முடித்த பிறகு, பவன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் நம்பகத்தன்மை கூறு மேலாளராக சேர்ந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |