இளம்பெண்ணைக் கொன்று தூக்கிச்செல்லும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்: கமெராவில் சிக்கிய காட்சி
சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன் சகநாட்டவரான இளம்பெண் ஒருவரைக் கொன்று பொலிஸ் வாகனம் ஒன்றின் அருகிலேயே தூக்கிச் செல்லும் அதிரவைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கமெராவில் சிக்கிய காட்சி
ஈக்வடார் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவரான Jhon Moises Chacaguasay-Ilbis, (21) என்னும் இளைஞர், தன்னைப்போலவே புலம்பெயர்ந்த, தனக்கு நன்கு அறிமுகமான Joselyn Jhoana Toaquiza (21) என்னும் இளம்பெண்ணை, அவரது பிறந்தநாள் அன்றே கொலை செய்துள்ளார்.
ஜோனும் ஜோஸ்லினும் ஈக்வடார் நாட்டில் ஆரம்பப்பள்ளியில் இணைந்து படித்துள்ளார்கள்.
அதன்பின், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோன் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். ஜூன் மாதம் ஜோஸ்லின் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 18ஆம் திகதி, ஜோனும், ஜோஸ்லினும் தங்கும் விடுதி ஒன்றிற்குள் செல்லும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சிறிது நேரத்தில் ஜோஸ்லினின் உயிரற்ற உடலைத் தூக்கிகொண்டு ஜோன் வெளியேறும் காட்சியும் கமெராவில் பதிவாகியுள்ளது. அவர் ஓரிடத்தில் குழி தோண்டி ஜோஸ்லினுடைய உடலைப் புதைத்துள்ளார்.
NEW: Police cruiser appears to drive by at the exact moment an illegal immigrant from Ecuador carries the limp body of a woman out of an Airbnb in Syracuse.
— Collin Rugg (@CollinRugg) June 30, 2024
Jhon Moises Chacaguasay-Ilbis is accused of k*lling Joselyn Jhoana Toaquiza on her birthday.
Footage shows the illegal… pic.twitter.com/E994q0Ie6b
இன்னொரு விடயம் என்னவென்றால், ஜோஸ்லினின் உடலை அவர் தூக்கிக்கொண்டு வெளியே செல்லும் அதே நேரத்தில், ஒரு பொலிஸ் கார் அவர்களைக் கடந்து செல்லும் காட்சியும் கமெராவில் பதிவாயுள்ளது.
பொலிசில் சரண்
இந்நிலையில், ஜோன் பொலிசில் சரணடைந்துள்ளார். அவர் மீது கொலக்குற்றச்சாட்டு மற்றும் மனித உடலை மறைத்துவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தான் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் என்ன நடந்தது என்பது தனக்கு நினைவில்லை என்றும் ஜோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |