'நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ்' கதறி அழுத ஜார்ஜ் ஃப்ளாய்ட்! பொலிஸ் பாடிகேமில் சிக்கிய காட்சிகள் வெளியீடு
ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறப்பதற்கு சற்று முன்பு, அவரை கைது செய்த பொலிஸின் பாடி கமெராவில் "நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ்" என மன்றாடிய பரிதாப காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் உலகளவில் பொலிஸுக்கும் இனவாதத்துக்கும் எதிராக மிகப் பெரிய போராட்டத்தை தூண்டியது.
அவர் கொல்லப்பட்டதற்கான வழக்கு தற்போது Minneapolis நிதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமையன்று, சம்பவத்தின் நேரடி சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.
அப்போது, ஜார்ஜ் ஃப்ளாய்டை கைது செய்த அதிகாரிகளான Thomas Lane, J Alexander Kueng மற்றும் Tou Thao ஆகியோரின் உடலில் பொருத்தப்பட்டிருந்த காமெராக்களில் பதிவான காட்சிகளை ஆதாரங்களாக சமர்பிக்கப்பட்டன.
அதில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் "ப்ளீஸ் என்னை சுட்டுவிடாதீர்கள், எனது அம்மாவை நான் இழந்துவிட்டேன். நான் உங்களை தடுக்கவில்லை, நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன்" என கதறியுள்ளார்.
இருப்பினும் அவரை கைவிலங்கிட்டு, காரில் ஏற்ற பொலிஸ் முயற்ச்சித்தபோது, ஜார்ஜ் ஃப்ளாய்ட் பயத்தில் அழுதுள்ளார்.
"ப்ளீஸ்., நான் கெட்டவன் அல்ல, ப்ளீஸ்" என தொடர்ந்து கெஞ்சியுள்ளார்.
நெஞ்சை உலுக்கும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
