எதிரியின் தவறான ஒரு முடிவு! பதிலடி உறுதி: கடும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா
அண்டை நாடான தென் கொரியாவின் தவறான ஒரு முடிவு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கிம் ஜோங் உன் சகோதரி எச்சரித்துள்ளார்.
வட கொரியா தயங்காது
எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், எதிரியான தென் கொரியாவை தாக்க வட கொரியா தயங்காது என்று Kim Yo-Jong தெரிவித்துள்ளார். வடகொரிய எல்லைக்கு வடக்கே கடலில் பல நாட்கள் ஷெல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், Kim Yo-Jong இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
@afp
ஆனால் கடந்த பல நாட்களாக வடகொரியா சுமார் 200 ஷெல் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தென் கொரியாவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இது அமைதியை மொத்தமாக சீர்குலைக்கும் நடவடிக்கை என்றும் தென் கொரியா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
அத்துடன் உள்ளூர் மக்கள் எல்லைப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், படகு போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஞாயிறன்று நடந்த தொடர் தாக்குதலை அடுத்தே, தென் கொரியா உள்ளூர் மக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளது.
@afp
மேலும், சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே சனிக்கிழமை மேலும் 60 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை 90 க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தென் கொரிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எந்த நேரத்திலும் வெடிக்கலாம்
இந்த நிலையிலேயே Kim Yo-Jong தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரிய ராணுவம் எந்த நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாகவும், எதிரியின் தவறான ஒரு முடிவு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணுவ உடையில் இருக்கும் குண்டர்கள் என்றும் கோமாளிகள் என்றும் தென் கொரிய ராணுவ வீரர்களை Kim Yo-Jong கிண்டலடித்துள்ளார். இதனிடையே, தென் கொரிய எல்லையை கடந்து வடகொரிய ராணுவத்தின் தாக்குதல் இருக்கவில்லை என்றும், பாதுகாப்பு கருதியே உள்ளூர் மக்களை வெளியேற்றியுள்ளதாகவும் தென் கொரிய நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
@ap
கடந்த டிசம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட கூட்டம் ஒன்றில், கிம் ஜாங்-உன் தெற்கில் அணுசக்தி தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் விடுத்தார். மட்டுமின்றி ஒரு ஆயுத மோதல் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |