மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவில் இந்த இரண்டு முக்கியமான இளவரசிகளுக்கும் பங்கில்லை: ஆனால்...
மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விழாவில் கலந்துகொள்பவர்கள் குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன.
இந்த இரண்டு முக்கியமான இளவரசிகளுக்கும் பங்கில்லை
அவ்வகையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகியோருக்கு முடிசூட்டுவிழாவில் பங்கில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், அதிகம் வெளியே தெரியாத Gloucester கோமகன், கோமகள், மற்றும் Kent கோமகன், இளவரசி அலெக்சாண்ட்ரா ஆகியோருக்குக் கூட மன்னருடைய முடிசூட்டு விழாவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
குட்டி இளவரசி சார்லட், இளவரசர்கள் ஜார்ஜ் மற்றும் லூயிஸ் முதல், அதிகம் வெளியில் தெரியாத இளவரசி அலெக்சாண்ட்ரா வரை மன்னருடைய முடிசூட்டு விழாவில் பொறுப்பு வகிக்கும் நிலையில், நெருக்கமான உறவினர்களாக இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகியோருக்கு முடிசூட்டுவிழாவில் பங்கில்லை.
Image: Max Mumby/Indigo/Getty Images
காரணம் என்ன?
அதாவது, இந்த Gloucester கோமகன், கோமகள், மற்றும் Kent கோமகன், இளவரசி அலெக்சாண்ட்ரா ஆகியோரைக் குறித்து நமக்கு அதிகம் தெரியாது என்றாலும், அவர்கள் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் சகோதர உறவுமுறையார் ஆவர். அத்துடன், மகாராணியாராக எலிசபெத் பொறுப்பேற்ற 1952ஆம் ஆண்டு முதலே, அவர்கள் தொடர்ந்து ராஜ குடும்ப பணிகளை நிறைவேற்றி வருகிறார்கள்.
விடயம் இதுதான், அதாவது, யாரெல்லாம் ராஜ குடும்ப பணிகளை நிறைவேற்றி வருகிறார்களோ, working royals ஆக உள்ளார்களோ, அவர்களுக்கு மன்னருடைய முடிசூட்டு விழாவில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Image: Getty
ஆகவேதான், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகியோருக்கு மட்டுமல்ல, இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகனுக்கும் மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பொறுப்புகள் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் working royals ஆக பணிகளை செய்துவரவில்லை.
இன்னொரு முக்கிய விடயம், இவர்களுக்கெல்லாம் மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பொறுப்புகள்தான் கொடுக்கப்படவில்லையே தவிர, அவர்கள் முடிசூட்டுவிழாவில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images