பார்வையை இழந்துவரும் இம்ரான் கான்- உச்சநீதிமன்றம் மருத்துவ ஆய்வு உத்தரவு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் இருக்கும் நிலையில், அவரது வலது கண்ணில் 15 சதவீதம் பார்வை மட்டுமே உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் சல்மான் சஃப்தார், பிப்ரவரி 10 அன்று இம்ரான் கானை இரண்டு மணி நேரம் சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், கடந்த மூன்று மாதங்களாக பார்வை குறைவடைந்தும், சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6-ஆம் திகதி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், “Right Central Retinal Vein Occlusion” எனப்படும் கண் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்தக் கட்டு காரணமாக ரெட்டினா கடுமையாக பாதிக்கப்படும் நிலை.

இம்ரான் கான், தொடர்ந்து கண்களில் நீர் வடிவதால், மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நிபுணதத்துவம் வாய்ந்த கண் மருத்துவர்களால் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம், மருத்துவ குழுவை அமைத்து, பிப்ரவரி 16-க்குள் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், இம்ரான் கானுக்கு அவரது மகன்களுடன் தொலைபேசி தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் கட்சியான PTI, அவரது உடல்நிலை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளது. “அவரது உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கட்சி எச்சரித்துள்ளது.
2018-ல் பிரதமராக இருந்த இம்ரான் கான், 2022-ல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பதவி நீக்கப்பட்டார். 2023-ல் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ராவல்பிண்டி சிறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Imran Khan eye vision loss, Ex-PM Imran Khan health update, Imran Khan right eye 15 percent vision, Pakistan Supreme Court Imran Khan, Imran Khan medical report 2026, Imran Khan prison health issues, Imran Khan retinal vein occlusion, Imran Khan court hearing health, PTI reaction Imran Khan health, Imran Khan political impact vision