சல்மான் ருஷ்டி மீதான கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால்..முன்னாள் பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கருத்து
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் நியாயமற்றது என இம்ரான் கான் கருத்து
டெல்லி மாநாட்டில் ருஷ்டி பங்கேற்பதை அறிந்து புறக்கணித்த இம்ரான் கான் தற்போது ஆதரவு கருத்து
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து அவரை கத்தியால் குத்திய ஹாடி மாதர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். பின்னர் ஹாடி மாதர் தற்போது ஜாமீன் இல்லாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
PC: DAVID LEVENSON/GETTY IMAGES
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
கார்டியன் செய்தித்தாளுக்கு அவர் அளித்த பேட்டியில் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இம்ரான் கான், 'இது பயங்கரமானது, சோகமானது என்று நான் நினைக்கிறேன். ருஷ்டி புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்தவர்.
நம் இதயங்களில் வாழும் ஒரு தீர்க்கதரிசியின் அன்பு, மரியாதை ஆகியவற்றை அவர் அறிவார். எனவே, அந்த கோபத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்கள் நியாயப்படுத்த முடியாது' என தெரிவித்துள்ளார்.
PC: Reuters
கடந்த 2012ஆம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் சல்மான் ருஷ்டி பங்கேற்க இருப்பதை அறிந்த இம்ரான் கான், அதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.