இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை! நள்ளிரவில் அமுல்
பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 30 ரூபாய் அதிகரிக்கப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல் விலை 420 ஆக உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 30 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தற்போது அந்நாட்டில் பெட்ரோல் விலை 179.86 ஆகவும், டீசல் விலை 174.15 ஆகவும், மண்ணெண்ணெய் விலை 155.56 ஆகவும், லைட் டீசல் விலை 148.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Photo Credit: AFP/File
விலையேற்றம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், 'பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் நாங்கள் இன்னும் ஒரு லிட்டர் டீசலுக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம்' என தெரிவித்தார்.
Photo Credit: IANS
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 'வெளிநாட்டு முதலாளிகளுக்கு முன்பு, இறக்குமதி செய்யப்பட்ட அரசின் கீழ்ப்படிதலுக்கான விலையை தேசம் செலுத்தத் தொடங்குகிறது. லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 சதவீதம் அல்லது ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது, நமது வரலாற்றிலேயே மிக அதிகப்படியான விலை உயர்வு . திறமையற்ற மற்றும் உணர்ச்சியற்ற அரசாங்கம் 30 சதவீதம் மலிவான எண்ணெய் வாங்கும் ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை தொடரவில்லை' என அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'இதற்கு மாறாக, அமெரிக்காவின் மூலோபாய நட்பு நாடான இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மலிவான எண்ணெயை வாங்குவதன் மூலம் எரிபொருள் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடிந்தது. இப்போது நமது தேசம் இந்த மோசடி கும்பலின் கைகளால் மற்றொரு பாரிய பணவீக்கத்தை சந்திக்கும்' என தெரிவித்துள்ளார்.
In contrast India, strategic ally of US, has managed to reduce fuel prices by Pkr 25 per litre by buying cheaper oil from Russia. Now our nation will suffer another massive dose of inflation at the hands of this cabal of crooks.
— Imran Khan (@ImranKhanPTI) May 26, 2022