ஜேர்மனியில் 3,000 ஆண்டுகள் பழமையான போர் வாள்... சேதமடையாமல் பத்திரமாக மீட்பு
தெற்கு ஜேர்மனியில் இருந்து சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான வெண்கல வாள் ஒன்று சேதமடையாமல் மீட்கப்பட்டுள்ளது.
14ம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில்
குறித்த வாள் தொடர்பில் தெரிவித்த பவேரிய மாகாணத்தின் BLfD நிர்வாகம், 14ம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாளாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
Archäologie-Büro Dr Woidich
கடந்த வாரம் Nördlingen பகுதியில், Nuremberg மற்றும் Stuttgart இடையே அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.
இந்த வாள் ஒரு எண்கோண பிடியைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூன்று பேர் கொண்ட கல்லறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மூவரும் உறவினர்களா அல்லது எந்தவகையில் அவர்கள் ஒரே கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தகவல் இல்லை என்றே BLfD நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Archäologie-Büro Dr Woidich
மேலும், அந்த வாள் மற்றும் மூவரின் அடக்கம் தொடர்பில் இன்னும் ஆய்வு செய்யப்பட வேண்டும், இதனால் நமது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பை இன்னும் துல்லியமாக வகைப்படுத்த முடியும் என மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |