உக்ரைன் போரில் புடின் இழந்த ராணுவத்தினர் எண்ணிக்கை... பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்
உக்ரைனில் 302,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தரவுகளில் வாக்னர் படையினர் இழந்த வீரர்கள் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.
தோல்வி முகத்தில் இருக்கும்
பிரித்தானிய உளவு அமைப்புகள் வெளியிட்டுள்ள இந்த தகவலில், தோல்வி முகத்தில் இருக்கும் நிலையிலும், விளாடிமிர் புடின் போரை முன்னெடுத்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னர் அமெரிக்க அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலில் உக்ரைன் போரால் 120,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 180,000 வீரர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் தற்போது பிரித்தானியா தரப்பு வெளியிட்டுள்ள தகவலில் 302,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயங்களுடன் தப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்களில் 10,000 பேர்கள்
மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ல் புடின் தனது முழு வீச்சிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து 7,117 கவச வாகனங்களை இழந்திருக்கிறார். அத்துடன் 93 போர் விமானங்கள், 132 ஹெலிகொப்டர்கள் மற்றும் 320 ட்ரோன் விமானங்களையும் ரஷ்யா இழந்துள்ளது.
மேலும், பல பிரிவுகளில் 16 போர் கப்பல்களையும் ரஷ்யா இழந்துள்ளது. பெரும் படைகளை திரட்டி போருக்கு புறப்பட்ட ரஷ்யா, ஒரே ஆண்டில் மொத்தமாக பெரும் இழப்பை எதிர்கொண்டுள்ளது.
உக்ரைன் தரப்பில் 70,000 வீரர்களை இழந்துள்ளது. அத்துடன் 100,00 முதல் 120,000 வீரர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். பொதுமக்களில் 10,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 17,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |