உங்களுக்கு கஷ்டம் வரப்போவதை உணர்த்தும் சம்பவங்கள்..! கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே அனைவரது வாழ்க்கையிலும் பிரச்சினைகள் என்பது மாறி மாறி வந்துக்கொண்டே தான் இருக்கும்.
அதிலிருந்து மீண்டும் வரமுடியாமல் கஷ்டப்படுவார்கள். ஒருவரது வாழ்வில் பிரச்சினை இல்லை என்றால் தான் ஆச்சரியம்.
சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு வாழ்பவர்களும் இவ்வுலகில் இருகின்றனர். சிலர் சிறுவயதில் கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் நல்ல வாழ்க்கையை வாழ்வார்கள்.
ஒரு சிலர் சிறு வயதில் செல்வாக்குடன் வாழ்ந்தால், பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அவர்கள் செய்த நல்லது, கேட்டதை வைத்துதான் அவர்களின் வருங்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
அவ்வாறு நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் கிரகங்களின் நிலையும் காரணமாகிறது.
வாழ்க்கையில் கெட்ட விடயங்கள் ஏதாவது நிகழப்போகிறது என்றால், அதற்கான ஒரு சில அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும்.
காகம் கத்தினால்… “வீட்டிற்கு விருந்தாளிகள் வரப்போகிறார்கள்… பூனை குறுக்கே சென்றால் போன காரியம் விளங்காது” என பல மூட நம்பிக்கைகள் உள்ளன.
இதை தவிர இன்னும் பல விடயங்கள் உள்ளன. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
வீட்டில் உள்ள துளசி செடி கருகுவது
துளசி செடியானது புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. துளசி லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாக பார்க்கப்படுகிறது. இதை எப்போதும் பசுமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
துளசி செடி அடிக்கடி வாடினால் அது நல்லது அல்ல. துளசி வாடினால் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். மேலும் பிரச்சினைகள் அதிகமாக வாழ்வில் நிகழும்.
அடிக்கடி கண்ணாடி உடைவது
வீட்டில் கண்ணாடி உடைவது சாதாரணம் தான். அதுவே அடிக்கடி நிகழ்ந்தால் நல்லதல்ல. அடிக்கடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம்.
உடைந்த கண்ணாடி பொருட்களையும் வீட்டில் வைத்திருக்க கூடாது.
அடிக்கடி தங்கம் காணாமல் போவது
வீட்டில் தங்கம் காணாமல் போவது சாதாரண விடயம் தான். ஆனால் அடிக்கட்டி காணாமல் போவது சரியில்லை. இந்த அறிகுறிகள் பல இழப்பை குறிக்கிறது. எனவே, இது போன்ற சம்பவங்கள் நடந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
இது ஜோதிட சாஸ்திரத்தின் படி, மகா லட்சுமி கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பூனை அழுவது
வீட்டில் உள்ள பூனை அல்லது வீட்டை சுற்றி பூனை அழுவது போன்ற சத்தம் கேட்டால் சற்று கவனமாக இருக்க வேண்டும். பொதுவாகவே பூனை அழுவதை கெட்ட சகுணமாக பார்கிறார்கள்.
பூனையின் அழுகை சத்தம் கேட்கும் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்காது என்பது ஐதீகம். எனவே சற்று கவனத்துடன் செயற்படுவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |