எந்த வயதிலும் உயரத்தை அதிகரிக்கனுமா? இயற்கையான எளிய வழிமுறைகள் இதோ
மனிதனாக பிறந்த அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப உயரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லை என்றால், அவர்களது அழகையே உருக்குலைத்து விடும்.
இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளது. அவற்றை தினமும் கடைபிடித்தாலே போதும் மிகவிரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும்.
சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகளவு உண்டு வர தங்களது உடலில் ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக தங்களால் சில இன்ஞ் வரை உயரத்தை அதிகரிக்க முடியும்.
உயரத்தை அதிகரிக்க உதவும் உணவுகளான கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், லிவர், உருளைக்கிழங்கு, நட்ஸ், பாதாம், நிலக்கடலை, சிக்கன், பீன்ஸ், பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தினமும் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
iStock
ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரத்தை அதிகரிக்க முடியும். எனவே எலும்புகள் வலிமையாவதற்குத் தேவைப்படுவது கால்சியம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் பொருட்களை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.
தினமும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும் நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மற்றும் உயரத்தை அதிகரிக்க முடியும்.
இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும். அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் உட்காருவதும், நிற்பதும் கூட உயரமாக உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.