உயரும் அரிசி விலையால் ஒருபக்கம் நம்பிக்கை மறுபக்கம் பிரச்சனை: பரிதவிக்கும் ஒரு நாட்டு விவசாயிகள்
வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்த நிலையில், உலக நாடுகளின் மொத்த கவனமும் தாய்லாந்தின் மீது திரும்பியது. உயரும் அரிசி விலையால், தாய்லாந்தின் வேளாண் மக்கள் உற்சாகமடைந்தாலும், அதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
அரிசி ஏற்றுமதிக்கு தடை
அரிசி அறுவடை முடித்ததும் தாய்லாந்து விவசாயி ஒருவர் ஆகத்து மாத இறுதியில் மீண்டும் விதைத்துள்ளார். தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு அறுவடைக்கு பின்னர் உடனடியாக மீண்டும் விதைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என தாய்லாந்து அரசு ஆலோசனை வழங்கியிருந்தது.
@reuters
ஆனால், சுமார் 5,600 அமெரிக்க டொலர் கடனிருப்பதாக கூறி, அந்த விவசாயி மீண்டும் விதை விதைக்க முடிவு செய்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு தற்போது இந்தியா வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த பின்னர் காணப்படுகிறது.
இதுவே பல தாய்லாந்து வேளாண் மக்களையும் ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவே தாய்லாந்து வேளாண் சமூகம் முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்து உலக நாடுகளுக்கு அதிக அரிசி ஏற்றுமதி செய்யும் நாடு தாய்லாந்து.
@reuters
இது இவ்வாறிருக்க, தாய்லாந்தில் நெல் பயிரிடப்படும் நிலத்தின் அளவு கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் 14.5 சதவீதம் குறைந்துள்ளது என்றே கூறப்படுகிறது.
தாங்க முடியாத வேளாண் கடன்கள்
தாய்லாந்தின் பல நூற்றாண்டுகள் பழமையான நெல் சாகுபடி முறை பருவநிலை மாற்றம், தாங்க முடியாத வேளாண் கடன்கள் மற்றும் புதுமையின்மை காரணமாக கடுமையான சிக்கலில் உள்ளது.
கடன் தொல்லை காரணமாகவே வேளாண் மக்கள் பலர் தங்கள் தொழிலை கைவிட்டு, விவசாய நிலத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2022ல் மட்டும் தாய்லாந்து 7.7 மில்லியன் டன் அரிசியை மத்திய கிழக்கு நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
@reuters
ஆனால் மழை மற்றும் உரிய பாசன முறை இல்லாததால் சாகுபடி நிலப்பரப்பு என்பது தற்போது குறைந்து வருகிறது. 2024 கடைசியில் தாய்லாந்தில் தண்ணீர் பற்றாக்குறை மிக மோசமான நிலையை எட்டும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |