இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கி இந்தியா உதவி
இலங்கையில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 75 பேருந்துகளை இந்தியா வழங்கி உதவியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் தவித்துவருகிறது. கடந்த ஆண்டில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் ( இந்திய பணமதிப்பில் சுமார் ரூ.32,800 கோடி) நிதியை வாழ்வாதார நிதியாக இலங்கைக்கு வழங்கியது இந்தியா.
கடந்த ஜனவரியில் அன்னியச்செலாவணி கையிருப்புக்காக 900 மில்லியன் டொலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது.
மேலும், எரிபொருள் வாங்குவதற்காக 500 மில்லியன் டொலர் நிதி உதவியை அறிவித்தது, பின்னர் 700 மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டது.
ET
இவ்வாறு 'முதலில் அண்டை நாடு' என்ற கொள்கையின் பெயரால் இலங்கைக்கு உதவிகளை செய்து வருகிறது இந்தியா.
இந்நிலையில், அங்கு பொது போக்குவரத்து சாதன வசதியை மேம்படுத்தும் வகையில், இந்தியா 75 பேருந்துகளை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதர் விடுத்துள்ள அறிக்கையில், " இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து வாரியத்திடம் இந்திய தூதர் 75 பேருந்துகளை வழங்கியாது. இலங்கை பொலிஸாருக்கு கடன் உதவியாக 125 சொகுசு வாகனங்களையும் டிசம்பர் மாதம் இந்தியா வழங்கியது" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.