உடனடி போர் நிறுத்தம்: ஐ.நா வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா உட்பட 45 நாடுகள்
இஸ்ரேல்- ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஐநா பொதுச் சபையில் இந்தியா வாக்களிக்கவில்லை.
ஜோர்டானால் சமர்ப்பிக்கப்பட்ட
அக்டோபர் 7ல் ஹமாஸ் படைகள் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களுக்குப் பிறகு இஸ்ரேல் பாரிய எதிர் தாக்குதலை தொடுத்து வருகிறது.
இந்த நிலையில், வங்கதேசம், மாலத்தீவுகள், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவுடன், ஜோர்டானால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி கண்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமானக் கடமைகளை நிலைநிறுத்துதல் என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிக்கவும் செய்துள்ளன.
இதில், இந்தியாவைத் தவிர, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் புறக்கணித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபோதும் எந்த நாடுகளாலும்
இதனிடையே, ஜோர்டான் கொண்டு வந்த வரைவுத் தீர்மானத்தில் ஹமாஸ் தாக்குதலை கண்டிக்க வேண்டும் என்ற திருத்தம் கனடா சார்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பில் போதிய ஆதரவை பெற முடியாமல் தோல்வி கண்டுள்ளது.
குறித்த வாக்கெடுப்பில், கனடாவுக்கு ஆதரவாக இந்தியா வக்களித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அனைத்து மனிதாபிமான அமைப்புகளுக்கும் மனிதாபிமான சேவைகளை காஸா மக்களுக்கு வழங்கும் அனுமதியை வரைவுத் தீர்மானம் கோரியது.
ஆனால் ஐ.நா பொதுச்சபை பிரேரணைகள் ஒருபோதும் எந்த நாடுகளாலும் பின்பற்றப்படுவதில்லை என்பதே உண்மை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |