மாலத்தீவில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா ஒப்புதல்
மாலத்தீவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு தெரிவித்தார்.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள சுமார் 75 இந்திய வீரர்களை திருப்பி அனுப்புவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார்.
துபாயில் நடைபெற்று வரும் 2023 COP28 மாநாட்டையொட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்களை திரும்பப் பெற இந்தியா ஒப்புக்கொண்டது.
வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உயர்மட்டக் குழுவை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் முய்சு கூறினார்.
மாலத்தீவின் தற்போதைய ஜனாதிபதி முய்சு, இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைக்கு மாறாக 180 டிகிரி கொள்கையை பின்பற்றுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India Maldives Relation, India Agrees To Withdraw Soldiers From Maldives, President Mohamed Muizzu, Maldives's India first policy, COP28 climate summit