'ஆபரேஷன் சிந்து': போர்சூழலில் ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய 272 இந்தியர்கள்
ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 272 இந்தியர்கள் நாடு திருப்பியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்து
மத்திய கிழக்கில் இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதலால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்து' என பெயரிடப்பட்டது.
அதன் பேரில் நேற்று முன்தினம் 1,100க்கும் மேற்பட்டோரை இந்தியா சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தது.
இந்த நிலையில், ஈரானின் மஷாத் நகரில் இருந்து டெல்லிக்கு இன்று அதிகாலையில் 272 இந்தியர்கள் மற்றும் 3 நேபாள நாட்டினர் சிறப்பு விமானம் மூலம் வந்திறங்கினர்.
3,426 இந்தியர்கள்
இதன்மூலம் இதுவரை ஈரானில் இருந்து 3,426 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானில் உள்ள தங்களுடைய நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்காவும் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |