ஜெலென்ஸ்கியின் பயத்தை இறுதியில் ஒப்புக்கொண்ட ட்ரம்ப்: மிகவும் கடினமானவர் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் திட்டமிருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
கடினமான விடயம்
உக்ரைன் போரில் அவர் வெல்வால் என்றல், அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேட்டோ கூட்டணியின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தல்களில் ஒன்றாக ரஷ்யாவை ட்ரம்ப் அடையாளம் காட்டியுள்ளார்.
மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதலைத் தீர்ப்பது என்பது கடினமான விடயம் என்றும் ஜனாதிபதி ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். மட்டுமின்றி, தமது லட்சியங்களில் விளாடிமிர் புடின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என தாம் நம்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்லார்.
புதன்கிழமை ஹேக்கில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய ட்ரம்ப், அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனைப் பாதுகாக்கத் தேவையான கூடுதல் ஏவுகணைகளை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் குறிப்பிட்டார்.
அது சாத்தியம்
உக்ரைனுக்கு அப்பால் புடினுக்கு பிராந்திய லட்சியங்கள் உள்ளதா என்று ட்ரம்பிடம் எழுப்பிய கேள்விக்கு, அது சாத்தியம் என்று பதிலளித்துள்ளார். தாம் நினைத்ததைவிட புடின் கடினமானவர் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அவருக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சில பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், உக்ரைனை அடுத்து புடினுக்கு பல லட்சியங்கள் இருப்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |