இந்தியா இவ்வளவு ரன் அடித்தால் தான் இங்கிலாந்தை ஜெயிக்க முடியும்! உறுதியாக கூறிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு எவ்வளவு ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ஓட்டங்கள் எடுத்து 171 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.
இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால், இப்போட்டியில் நிச்சயம் ஒரு முடிவு கிடைக்க அதிக வாய்ப்புண்டு, அதே சமயம் இந்தியா ஜெயிக்க வேண்டும் என்றால், இங்கிலாந்திற்கு மிகப் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
அது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறுகையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை 99 ஓட்டங்கள் முன்னிலையுடன் முடித்துள்ளதால், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தது 350 ஓட்டங்களாவது குவிக்க வேண்டும்.
அப்போது தான் இந்திய பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்து அணியை 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களும், இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 99 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.