15 இந்திய நகரங்களை தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி: முறியடித்த ஆகாஷ், S-400 ஏவுகணைகள்
“ஆபரேஷன் சிந்தூர்” மூலம் இந்தியா நடத்திய உயர் துல்லியத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் கடந்த இரவில் 15 இந்திய நகரங்களை இலக்காக்கும் மிகப்பாரிய ஏவுகணை தாக்குதலை முயற்சித்தது.
ஆனால், இந்தியாவின் சொந்த தயாரிப்பான ‘ஆகாஷ்’ ஏவுகணை மற்றும் S-400 ‘சுதர்சன சக்ரா’ போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் அதனை முற்றிலும் முறியடித்தன.
தாக்குதலுக்குள்ளாக இருந்த முக்கிய நகரங்கள்: அவந்திப்புரா, ஸ்ரீநகர், ஜம்மு, பாதான்கோட், அம்ரித்தசர், கபூர்தலா, ஜலந்தர், லுதியானா, ஆதம்பூர், பாட்டிந்தா, சண்டிகர், நால், பலோடி, உத்தர்லை மற்றும் பூஜ்.

ஆகாஷ் ஏவுகணை அமைப்பு:
- DRDO உருவாக்கிய ஆகாஷ் ஒரு medium-range mobile surface-to-air missile பாதுகாப்பு அமைப்பாகும்.
- இது 45 கிமீ தூரம் வரை விமானங்களை மற்றும் ஏவுகணைகளை துல்லியமாகத் தடுக்க முடியும்.
- வேகம்: Mach 3.5
- குறிவைக்கும் உயரம்: 18,000 மீ.
- ஒரே நேரத்தில் 64 இலக்குகளை கண்காணித்து, 12-ஐ தாக்க முடியும்.
S-400 Triumf system:
- ரஷ்யாவிலிருந்து வாங்கப்பட்ட இந்த அமைப்பு 400 கிமீ தூரம் வரை இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
- ஒரே நேரத்தில் 36 இலக்குகளை தாக்கும் திறன்
- 360 டிகிரி ரேடார் கண்காணிப்பு
- தேசிய தலைநகர் பகுதியிலும் மேற்குப் எல்லையிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அகாஷ் ஏவுகணை அமைப்பு மூலம் எல்லையில் டிஜிட்டல் பாதுகாப்பு வலை உருவாக்கப்பட்டு, பாகிஸ்தான் ஏவிய அனைத்து ஏவுகணைகளும் நடுத்தாலில் அழிக்கப்பட்டன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு திறனை உலகுக்கு தெளிவாக காட்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Pakistan missile clash 2025, Akash missile system India, S-400 missile India, Operation Sindoor, India intercepts Pakistan missiles, Indian air defence Akash, Pakistan attack on Indian cities, Akashteer defence system, Indian Army news May 2025, Pakistan retaliatory strike failure