தங்கத்தின் தேவை 70 சதவீதம் வீழ்ச்சி., என்ன காரணம்?
இந்தியாவில் தங்கத்தின் தேவை கடந்த இரண்டு வாரங்களில் 70 சதவீதம் குறைந்துள்ளது.
மே 13, 2026 அன்று அரசு தங்க இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.
இதனால், மே 27 வரை உள்ள 15 நாட்களில் தங்க தேவை 25 டன் இருந்த நிலையில், வெறும் 7.5 டன் மட்டுமே தேவைப்பட்டதாக தொழில் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய புலியன் & ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா, “இறக்குமதி வரி உயர்வுக்குப் பிறகு தேவை 70 சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக ஒழுங்கற்ற வியாபாரம் (unorganised trade) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஜோயலுக்காஸ் நிறுவனத் தலைவர் ஜாய் அலுக்காஸ், “இறக்குமதி வரி மட்டுமல்ல, பிரதமரின் ‘ஒரு வருடம் தங்கம் வாங்க வேண்டாம்’ என்ற வேண்டுகோளும் வாடிக்கையாளர்களின் மனநிலையை பாதித்துள்ளது” என கூறியுள்ளார்.
மேலும், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு, ஈரான் போரின் தாக்கம், மற்றும் ரூபாய் பலவீனம் ஆகியவை வாடிக்கையாளர்களை தங்கம் வாங்குவதிலிருந்து விலகச் செய்துள்ளன.
தற்போது தங்கத்தின் மொத்த வரி சுமை (GST உட்பட) 18.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. தென் இந்தியாவில் விற்பனை மிகவும் பலவீனமாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் இப்போது குறைந்த எடையுள்ள, குறைந்த கரட் நகைகளை வாங்குகின்றனர். அதேசமயம், பழைய தங்கத்தை விற்று பணம் பெறும் நடைமுறை அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |