கொரோனாவை இந்த நாடு சிறப்பாக கையாண்டுள்ளது! பாரட்டி தள்ளிய IMF
கொரோனா நெருக்கடியை இந்தியா திறமையாக கையாண்டுள்ளதாக பன்னாட்டு நிதியம் பாராட்டியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி ஏராளமான மக்களின் உயிரை பறித்துவிட்டது. தற்போது கொரோனாவின் தாக்கம், மெல்ல, மெல்ல குறைந்துள்ளது.
இதற்கு தடுப்பூசி தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கரோனா நெருக்கடியை இந்தியா திறமையாக கையாண்டதாக பன்னாட்டு நிதியம் (IMF)பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிதியம் கூறுகையில், இந்திய அரசு கொரோனா நெருக்கடியை மிக விரைவாகவும், திறமையாகவும் கையாண்டுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு நிதி ஆதரவை வழங்குதல், நிதிக் கொள்கைகளை தளா்த்துதல், பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல், இணக்கமான நிதி துறை செயல்பாடுகள் மற்றும் ஒழுங்காற்று கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்டவை கொரோனா நெருக்கடியை சமாளிக்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கிடையிலும், தொழிலாளா் சீா்திருத்தங்கள், தனியாா்மயமாக்கல் திட்டம் உள்பட கட்டமைப்பு சீா்திருத்தங்களை இந்தியா தொடா்ந்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
வரும் நடப்பு நிதியாண்டில் 2021-2022 இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது.
மேலும், இந்த வளா்ச்சி 2022-23-இல் 8.5 சதவீதமாகவும், 2021-22-ஆம் நிதியாண்டுக்கானபணவீக்கம் 5.6 சதவீதமாகவும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.