எல்-நினோ, எத்தனால் தேவை காரணமாக சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்தவுள்ள இந்தியா
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய சர்க்கரை ஏற்றுமதி நாடாக இருந்தது.
ஆனால், தற்போது எல்-நினோ காலநிலை மாற்றம் மற்றும் எத்தனால் உற்பத்தி தேவையால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் சர்க்கரை ஏற்றுமதி செய்ய முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மழை குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் கரும்பு பயிரிடும் நிலப்பரப்பு குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி குறையும்.
அதேசமயம், எத்தனால் கலவையுடன் பெட்ரோல் தயாரிப்பை அரசு ஊக்குவித்து வருவதால், கரும்பு அதிகமாக எத்தனால் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகிறது.

2022-23 வரை இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 6.8 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்தது. ஆனால், 2025-26 சீசனில் 8 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு, பின்னர் அரசு முழுமையாக தடை விதித்தது. உள்நாட்டு தேவையை முன்னுரிமை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 30.95 மில்லியன் டன் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 27.9 மில்லியன் டன் மட்டுமே உற்பத்தியாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் உள்ளூர் நுகர்வான 28.5 மில்லியன் டன்னுக்கு குறைவானது.
இதனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா சர்க்கரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம்.
2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் எல்-நினோ காரணமாக ஏற்பட்ட வறட்சியால் இந்தியா சர்க்கரை இறக்குமதி செய்தது. அதுபோல, 2027-28 சீசனில் மீண்டும் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவின் இந்த முடிவு உலக சந்தையில் சர்க்கரை விலையை உயர்த்தும். இதனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் அதிக பாதிப்புக்குள்ளாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |