கடன் வாங்கி அண்டை நாடுகளுக்கு உதவும் இந்தியா.., இலங்கை, மாலத்தீவுக்கு இத்தனை கோடிகளா?
அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள கடன் மற்றும் மானியங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடன் வாங்க இந்தியா திட்டம்
இந்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, நிதி பற்றாக்குறையை சமாளிக்க 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவுள்ளதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு வாங்கியதை விட இது குறைவாகும்.
கடன் வாங்கிய தொகை உள்நாட்டுக்கே தேவையாக இருந்தாலும், அண்டை நாடுகளுக்கும் கடன் வழங்கி இந்தியா உதவி செய்து வருகிறது. அதன்படி, நேற்று பட்ஜெட்டின் போது நடப்பு நிதியாண்டில் அண்டை நாடுகளுக்கு வழங்கிய மானியம் மற்றும் கடன்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகின.
அண்டை நாடுகள்
நடப்பு நிதியாண்டில் அண்டை நாடுகளுக்கு இந்தியா மானியமாக வழங்கிய தொகையை பார்க்கலாம்.
- ஆப்கானிஸ்தான் - ரூ.220 கோடி
- வங்கதேசம் - ரூ.130 கோடி
- பூட்டான் - ரூ.784 கோடி
- இலங்கை - ரூ.60 கோடி
- மாலத்தீவு - ரூ.770 கோடி
- நேபாளம் - ரூ.650 கோடி
- மங்கோலியா - ரூ.5 கோடி
- மொரிஷியஷ் - ரூ.330 கோடி
- மியான்மர் - ரூ. 370 கோடி
இதுதவிர பூட்டானுக்கு ஆயிரத்து 614 கோடி ரூபாய் கடனாகவும் இந்தியா வழங்கியுள்ளது.
அடுத்த நிதியாண்டு
அடுத்த நிதியாண்டில் அண்டை நாடுகளுக்கு இந்தியா மானியம் வழங்க திட்டமிட்டுள்ளது. அதை பார்க்கலாம்.
- ஆப்கானிஸ்தான் - ரூ.200 கோடி
- வங்கதேசம் - ரூ.120 கோடி
- பூட்டான் - ரூ.1078 கோடி
- இலங்கை - ரூ.75 கோடி
- மாலத்தீவு - ரூ.600 கோடி
- நேபாளம் - ரூ.700 கோடி
- மங்கோலியா - ரூ.5 கோடி
- மொரிஷியஷ் - ரூ.370 கோடி
- மியான்மர் - ரூ. 250 கோடி
இதுதவிர பூட்டானுக்கு 989 கோடி ரூபாய் கடனாகவும் இந்தியா வழங்கவுள்ளது.
இந்தியா உதவுவது ஏன்?
உள்நாட்டு வளர்ச்சிக்கே இந்திய கடன் வாங்கும் நிலையில் தான் உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் மற்ற நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே இந்தியாவுடனான உறவு என்பது நேர்மறையானதாக இல்லை. பதற்றமான சூழல் தான் நிலவி வருகிறது.
ஆசிய கண்டத்தில் வலிமையான நாடாக உருவெடுக்க மற்ற நாடுகளின் ஆதரவு மிக அவசியம். இதனால் தான் அண்ட நாடுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு உதவி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |