காலராவின் பிடியில் ஜாம்பியா., மனிதநேயம் காட்டும் இந்தியா
காலராவின் பிடியில் சிக்கியுள்ள ஜாம்பியாவிற்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான ஜாம்பியா காலராவின் பிடியில் சிக்கி தத்தளிக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிக்காக போராடி தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காலரா நாட்டை நாசம் செய்து வருகிறது.
இந்த வயிற்றுப்போக்கு நோயால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்படுகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா கைகொடுத்துள்ளது.
குளோரின் மாத்திரைகள், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் உதவியாக அனுப்பப்பட்டுள்ளன.
அந்த நாட்டுக்கு மொத்தம் 3.5 டன் மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சிறிய நாட்டில் காலரா தொற்றுநோயால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பாக்டீரியா தொற்றால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மொத்தமுள்ள பத்து மாகாணங்களில், இந்த காலரா ஒன்பது மாகாணங்களுக்கு பரவியுள்ளது.
ஏற்கனவே பல உயிர்களைக் காவு வாங்கிய காலரா நோயைக் கட்டுப்படுத்த ஜாம்பியா அரசு கடுமையாக உழைத்து வருகிறது.
மைதானங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெகுஜன தடுப்பூசி திட்டமும் தொடங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டர் சுத்தமான தண்ணீரை ஜாம்பியன் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளனர். நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India helps Zambia fight cholera outbreak, India Zambia, cholera, humanitarian aid