ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

Weather
By Arbin Nov 29, 2025 05:40 AM GMT
Report

வரலாறு காணாத வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் சனிக்கிழமை அதிகாலை இலங்கையை சென்றடைந்தது.

ஆபரேஷன் சாகர் பந்து

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களை ஏற்றிச் சென்ற C130 விமானம் அதிகாலை 1.30 மணியளவில் கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது.

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா | India Launches Op Sagar Bandhu

இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் வரவேற்றனர். இலங்கையின் நெருக்கடியான நேரத்தில் உதவுவதற்காக இந்தியா வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சாகர் பந்துவைத் தொடங்கியது.

இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட பின்னர், முதல் தவணை நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.

ஐரோப்பிய தலைவர்களின் எதிர்ப்பை மீறி புடினை ரஷ்யாவில் சந்தித்த ஒரு நாட்டின் பிரதமர்

ஐரோப்பிய தலைவர்களின் எதிர்ப்பை மீறி புடினை ரஷ்யாவில் சந்தித்த ஒரு நாட்டின் பிரதமர்

களனி மற்றும் அத்தனகலு ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், வெள்ளிக்கிழமை இரவு முதல் மேற்கு மாகாணத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவு நிலைமை ஏற்படும் என்று இலங்கை அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து இந்த நிவாரண உதவிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தித்வா புயல் பேரழிவை ஏற்படுத்தி வருவதால், இலங்கை அதன் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொள்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உள்கட்டமைப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா | India Launches Op Sagar Bandhu

சனிக்கிழமை பகல் வெளியான தகவலின் அடிப்படையில், இதுவரை 69 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 34 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக மழை பெய்யும்

மட்டுமின்றி, இந்தப் பேரிடரால் 61,000 குடும்பங்களைச் சேர்ந்த 200,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மத்திய மாகாணத்தின் கண்டி நிவாரண அதிகாரிகள், வெள்ளிக்கிழமை இரவுக்குள் கண்டி மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாகவும்,

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா | India Launches Op Sagar Bandhu

உத்தியோகப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மத்திய மலைநாட்டில் உள்ள பதுளை மாவட்டம், நிலச்சரிவால் மோசமாக பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமாகும்.

இதில் பலர் காணாமல் போயுள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். Ditwah சூறாவளி அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தியதால், மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபரேஷன் Sagar Bandhu... இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா | India Launches Op Sagar Bandhu

இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகுதியில் Ditwah சூறாவளி கரையைக்கடக்கும் என்றாலும், 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இலங்கையின் கிட்டத்தட்ட 35 சதவீத பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் மறுசீரமைப்பு பணிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US