இந்தியாவில் ஈரான் போர்க்கப்பலை நிறுத்த அனுமதி- மனிதாபிமான நடவடிக்கை
இந்தியாவில் ஈரான் போர்க்கப்பலை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததையடுத்து, இந்தியா மனிதாபிமான காரணங்களுக்காக ஈரானின் Lavan போர்க்கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “சட்ட ரீதியான சிக்கல்களைத் தாண்டி, மனிதாபிமான பார்வையில் இந்தியா இந்த முடிவை எடுத்தது. இது சரியான செயல்” என்று தெரிவித்துள்ளார்.
லவான் கப்பல் இந்தியாவில் நடைபெறும் கடற்படை பயிற்சியில் பங்கேற்க வந்திருந்தது.

அமெரிக்கா, IRIS Dena கப்பலை இலங்கையின் கடல்சார் பொருளாதார மண்டலத்தில் தாக்கியதில், 87 பேர் உயிரிழந்ததையடுத்து, இந்த கப்பலுக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்த லவான் கப்பல் அவசரமாக இந்தியாவிடம் அனுமதி கோரியது.
இந்திய கடற்படை வசதிகளில் 183 பேர் கொண்ட குழுவினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரத்தில், இலங்கை அதிகாரிகள், Booshehr எனும் மற்றொரு ஈரான் கப்பலை கிழக்கு கரையோர துறைமுகத்திற்கு அழைத்து சென்று, அதன் குழுவினரை கொழும்பு அருகே கடற்படை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |