உணவு தானிய ஏற்றுமதி குறித்த முக்கிய முடிவு: இந்திய அரசின் அறிவிப்பால் உலக நாடுகள் மகிழ்ச்சி!
உணவு ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை என அந்த நாட்டின் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலைகளின் தாக்கம் மற்றும் உக்ரைன் ரஷ்யா போரினால் ஏற்பட்ட உலகளாவிய கோதுமை தட்டுப்பாடு ஆகியவற்றின் விளைவாக இந்தியாவில் கோதுமையின் விலையை மலமலவென அதிகரிக்க தொடங்கியது.
எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தனியார் கோதுமைகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
REUTERS/Amit Dave
மேலும் இந்த பருவத்தின் ஏற்றுமதியை 10 மில்லியன் டன்களாக குறைத்தது, மற்றும் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக சர்க்கரை ஏற்றுமதியிலும் இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, கோதுமை ஏற்றுமதியைத் தடைசெய்து, சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் திடீர் முடிவு ஆகியவற்றால் அரிசியின் வெளிநாட்டு விற்பனையிலும் சில தடைகள் பற்றிய சந்தேகங்களை உலக சந்தைகளில் எழுப்பியது.
மார்ச் 2022 வரையிலான நிதியாண்டில், உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உலக சந்தையில் 21.2 மில்லியன் டன் தானியங்களை விற்றது, முந்தைய ஆண்டில் இது 17.8 மில்லியன் டன்களாக இருந்தது.
இந்தநிலையில், அரிசி போன்ற உணவுப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உணவு ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் திட்டம் ஏதும் இந்தியாவிடம் இல்லை, இதுவரை வேறு எந்தப் பொருட்களிலும் இதைச் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு அதிநவீன இராணுவ ஹெலிகாப்டர்: அமெரிக்காவை எச்சரிக்கும் புடினின் வீடியோ!
மேலும் மற்ற நாடுகளின் உண்மையான கோதுமையின் தேவைகளை குறித்து இந்தியா பரிசீலிக்கும் என்றும், அதற்காக அரசாங்க குழு தற்போது ஆய்வு செய்து வருவதாகவும் கோயல் தெரிவித்தார்.