சிங்கப்பூரில் இந்திய இளைஞன் செய்த தவறு உறுதியானது! 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
சிங்கப்பூரில் ஆயுதங்கள் விநியோகம் செய்த வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க அர்ஜுன் ரத்னவேலு என்ற இளைஞர் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆயுதங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற கடுமையான குற்றச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது விசாரணையின் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து, குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, அா்ஜுனுக்கு 8 ஆண்டுகள் சீா்திருத்த பயிற்சி சிறை தண்டனையும், 24 பிரம்படி தண்டனையும் வழங்கி சிங்கப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சீா்திருத்த பயிற்சி தண்டனை என்பது கடுமையான சிறைவாசமாக கருதப்படுகிறது. வழக்கமாக இந்த தண்டனை 5 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரையில் விதிக்கப்படும்.
இந்த காலத்தில், குற்றவாளிக்கு நன்னடத்தையை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை வழங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.