ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை முந்திய இந்தியா
ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.
அமெரிக்கா-சீனா வர்த்தக போர் இந்தியாவிற்கு மகத்தான சாதனையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட சீன பொருட்கள் மீதான வரி நடவடிக்கையின் காரணமாக, முக்கிய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றத் தொடங்கியுள்ளன.
Motorola, Samsung உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன.
குறிப்பாக Motorola, 2025 ஜனவரி முதல் மே மாதம் வரை 1.6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இதில் 99% அமெரிக்காவிற்கே சென்றுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1 மில்லியனில் இருந்து கணிசமான உயர்வாகும்.
இதை சாத்தியமாக்கியது இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டம். இந்த திட்டம் Foxconn, Tata Electronics, Dixon Technologies, Samsung போன்ற உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளித்து உலக சந்தைக்கு உற்பத்தியை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.
Samsung நிறுவனம் இந்தியாவிலிருந்து 9.45 லட்சம் மொபைல்களை ஏற்றுமதி செய்துள்ளது (2025 Jan-May), இது கடந்த ஆண்டில் இருந்த 6.45 லட்சம் யூனிட்டை விட 46% உயர்வாகும்.
Apple நிறுவனம் மட்டும் 2025 Jan-May இடையே 20.5 மில்லியன் iPhone-களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இதன் 80% அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
Vivo போன்ற சீன நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்து தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளன.
இந்த மாற்றம் இந்தியாவின் மொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சக்தியை உலக அரங்கில் முக்கியமாக நிலைநாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India smartphone exports 2025, PLI scheme success India, Motorola Dixon smartphone export, Apple iPhone export from India, Samsung India smartphone production, US China trade war impact, Made in India phones US, Vivo smartphone exports India, India mobile manufacturing growth, Indian electronics export 2025