பதற்றத்தில் பாகிஸ்தான் .., 114 Rafale ஜெட் விமானங்கள், 6 P-8I ஜெட் விமானங்களை வாங்க தயாராகும் இந்தியா
114 Rafale ஜெட் விமானங்கள், 6 P-8I ஜெட் விமானங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு இந்தியா தயாராகி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவால் பாகிஸ்தானுக்கு பதற்றம்
இந்திய விமானப்படை (IAF) மற்றும் இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் பல முக்கிய ஒப்பந்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், 114 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஆறு கூடுதல் P-8I ஜெட் விமானங்கள் மற்றும் 113 F-404 என்ஜின்களை வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது.
இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் திறனையும் வலிமையையும் மேம்படுத்தும்.
பிரெஞ்சு நிறுவனமான Dassault Aviation மற்றும் Indian aerospace நிறுவனங்கள் இணைந்து கட்டமைக்கும் 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவை இந்திய விமானப்படையிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெற்றுள்ளது.
ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய இந்த திட்டம், அடுத்த சில வாரங்களில் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் வாரியத்தால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இந்தியாவிடம் உள்ள 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் 2016 ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூரின் போது, ரஃபேல் போர் விமானம் சீனாவின் PL-15 ஏவுகணைகளை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |