தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் நிலை - இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் பெரும் மாற்றம்
இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், இந்தியா எண்ணெய் கொள்முதல் போக்கை மாற்றியுள்ளது.
மத்திய கிழக்கு பகுதி யில் ஏற்பட்ட போர் பதற்றம், குறிப்பாக அமெரிக்கா ஈரானின் அணுஇயக்க நிலையங்களை தாக்கியதுக்குப் பிறகு, உலகம் முழுவதும் மூலெண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இந்திய அரசு, எண்ணெய் கொள்முதல் முயற்சியில் மாற்றம் செய்து வருகிறது.
ஜூன் மாதம் இந்தியா, ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.
Kpler நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியா தினமும் 20–22 லட்சம் பீப்பாய் எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வாங்கியுள்ளது, இது கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ஆகும்.
மே மாதத்தில், ரஷ்யாவிலிருந்து 19.6 லட்சம் பேரல்கள், அமெரிக்காவிலிருந்து 4.39 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்துள்ளது. இது மே மாதத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க எண்ணெய் இறக்குமதி 50% அதிகரிப்பு ஆகும்.
மேற்கு ஆசியா எண்ணெய் குறைவு
இதற்கு மாறாக, சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு, குவைத் உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்துள்ளது – தினசரி 20 லட்சம் பேரல்களுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது.
ஏன் இந்தியா ரஷ்யாவை தேர்ந்தெடுக்கிறது?
இந்தியா - உலகின் மூன்றாவது பாரிய எண்ணெய் நுகர்வோர், அதன் எண்ணெய் தேவைகளில் 80 சதவீதம் இறக்குமதியில் சார்ந்துள்ளது.
2022-இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, மேற்கு நாடுகள் ரஷ்யாவிற்கு தடைகள் விதித்ததால், ரஷியாவின் எண்ணெய் விலை குறைந்தது. இது இந்தியாவை குறைந்த விலையில் அதிக எண்ணெய் வாங்க வைக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |