இது மட்டும் நடந்தால் இந்தியாவின் வெற்றி உறுதி! இங்கிலாந்து காலியாகிவிடும்: மைக்கல் வாகன்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி என்ன செய்தால் வெற்றி பெறும் என்பது குறித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஏனெனில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ஓட்டங்கள் எடுக்க, அதன் பின் ஆடிய இங்கிலாந்து அணி 290 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆக, அதன் பின் 99 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய இந்திய அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால், இப்போட்டி நிச்சயமாக டிரா ஆக அதிகம் வாய்ப்பில்லை, இந்தியாவோ அல்லது இங்கிலாந்தோ அதில் ஒரு அணி வெற்றி பெற போவது நிச்சயம் என்பது தெரிகிறது.
இதற்கிடையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் முழுவதும் இந்திய அணி நின்றுவிட்டால், அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.