இந்தியாவோட நிலை அப்பட்டமா தெரியுது! டோனி நியமனம் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்
உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில், ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் 23-ஆம் திகதி முதல் உலகக்கோப்பை டி20 தொடருக்கான சூப்பர் 12 போட்டி நடைபெறவுள்ளது.
இதில் வரும் 24-ஆம் திகதி இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்திலே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான தன்வீர் அகமது, டோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இந்திய அணி ஒரு சிறந்த அணி என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. உலகெங்கும் நடக்கும் பலவேறு தொடர்களில், இந்திய அணி மிகச் சிறந்த முறையில் சிறப்பாக விளையாடி வருகிறது.
ஆனால் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலி, மிகவும் நெருக்கடியில் இருக்கிறார். இதன் காரணமாகத் தான் அவர் தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
மேலும், இந்த நெருக்கடியை போக்குவதற்காகவே இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய அணியில் நிச்சயம் நெருக்கடி உள்ளது என்பது நன்றாகவே தெரிகிறது என கூறியுள்ளார்.