பாகிஸ்தான், வங்கதேசம், சீனாவிற்கு கவலையளிக்கும் செய்தி - இந்தியாவின் ருத்ராஸ்திரா சோதனை வெற்றி
பாகிஸ்தான், வங்கதேசம், சீனா ஆகிய எதிரி நாடுகளின் கவலையை எதிகாரிக்கும் விதமாக இந்தியாவின் ருத்ராஸ்திரா ட்ரோன் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "ருத்ராஸ்திரா" என்ற Vertical Take Off and Landing (VTOL) ட்ரோனைக் வெற்றிகரமாக சோதித்துள்ளது.
ராஜஸ்தானின் போக்கரன் துப்பாக்கி பரிசோதனை மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், ட்ரோன் 170 கி.மீ தூரம் பறந்தது. இலக்கில் 50 கி.மீ தூரத்திலிருந்தே தாக்கம் கொடுத்து, குறைந்த உயரத்தில் வெடித்து, பாரிய பரப்பளவில் உள்ள இலக்குகளை அழித்தது.
இந்த ட்ரோனை Solar Aerospace and Defense Limited (SDAL) நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது எதிரி நிலைகளின் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாத முகாம்களை அழிக்கவும், உடனடி வீடியோ வெளியீட்டுடன் தானாகவே திரும்பவும் திறன் வாய்ந்ததாக உள்ளது.
இந்த ட்ரோன்கள் ‘stand-off weapons’ ஆக பயன்படும். அதாவது, நேரடியாக சென்று தாக்காமல், தொலைதூரத்திலிருந்து குறிகோளுடன் தாக்க முடியும். எதிரி அரண்கள், கவர்ஃபயர் இடங்கள் போன்றவை இதன் மூலம் அழிக்கப்படும்.
இராணுவம் இப்போது பாரிய அளவில் இவை போன்ற indigenous ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு வருகிறது. இது இந்தியாவின் Atmanirbhar Bharat முயற்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rudrastra drone India test, Indian Army VTOL drone, Indigenous drone strike India, Solar Aerospace Rudrastra, India drone against Pakistan China, Pokhran Rudrastra drone test, Stand-off weapons Indian Army, India drone warfare news