இந்திய விமானப்படைக்காக 1,000 கிலோ எடையுள்ள Mk-84 குண்டுகள் தயாரிப்பு
இந்திய பாதுகாப்பு அமைச்சகம், விமானப்படைக்கு (IAF) தேவையான 1,000 கிலோ எடை கொண்ட Mk-84 வகை விமான குண்டுகளை உள்நாட்டில் வடிவமைத்து தயாரிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
தற்சார்பு (Self-reliance) முயற்சியை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது:
முதல் கட்டம்- 6 மாதிரிகள் (live மற்றும் inert) உருவாக்கம், tail units மற்றும் தொடர்புடைய உபகரணங்கள்.
இரண்டாம் கட்டம் - தகுதி பெற்ற நிறுவனங்களுக்கு Request for Proposal (RFP) வழங்கி, வணிக ரீதியான கொள்முதல்.

இந்த குண்டுகள், ரஷ்ய மற்றும் மேற்கத்திய விமானங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும்.
திட்டம் ‘Make-II’ (industry-funded) பிரிவில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் ‘Buy (Indian-IDDM)’ பிரிவில் 600 குண்டுகள் கொள்முதல் செய்யப்படும். IDDM என்பது Indigenously Designed, Developed and Manufactured என்பதைக் குறிக்கும்.
இந்த குண்டுகள், உயர் வெடிப்பு தாக்கம் மற்றும் peak over-pressure (PoP) உருவாக்கக்கூடியவை. Prototype development, user trials, commercial evaluation ஆகியவை 2.5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தில் குறைந்தது 50 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு இருக்க வேண்டும். இந்திய தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு கூட்டாண்மையுடன் (joint ventures, transfer of technology) பங்கேற்கலாம். ஆனால், உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IndiaDefense #IAF #IndigenousWeapons #AatmanirbharBharat #MilitaryTech #Mk84