2026-க்குள் மீதமுள்ள S-400 ஏவுகணைகள் வழங்கப்படும் - இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி
இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறவிருக்கிறது.
இந்தியா வாங்கியுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் மீதமுள்ள யூனிட்கள் 2025-26க்குள் வழங்கப்படும் என ரஷ்யாவின் இந்தியா துணை தூதர் ரோமன் பபுஷ்கின் உறுதியளித்துள்ளார்.
2018-இல் இந்தியா, ரஷ்யாவுடன் 5.43 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 5 S-400 Triumf ஏவுகணை அமைப்புகள் வாங்க ஒப்பந்தம் செய்தது.
இதில் மூன்று அமைப்புகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. மீதமுள்ள இரண்டு 2026-க்குள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல்களில் இந்த மிசைல் அமைப்பு "மிகச் சிறப்பாக செயல்பட்டது" என்றும், இது பாதுகாப்பு ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்றும் பபுஷ்கின் தெரிவித்தார்.
மேலும், ட்ரோன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறித்து அவர் கூறும்போது, "இது பல ஆண்டுகளாக ஒரு பாரிய சவாலாக உள்ளது. அதற்கான எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியாவுடன் சேர்ந்து வேலை செய்ய விருப்பமுள்ளது" என்று கூறியுள்ளார்.
இது மட்டும் அல்லாமல், எதிர்காலத்தில் விமான எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன எனவும் ரஷ்ய தூதர் குறிப்பிட்டார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கே லாவ்ரோவ் விரைவில் இந்தியா வரவிருக்கிறார் என்றும், வருகை திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
S-400 delivery India 2026, India Russia missile deal, S-400 Triumf performance India, India air defence systems, Russia anti-drone cooperation India, India Pakistan missile tensions, Sergey Lavrov India visit 2025, India Russia defence collaboration, S-400 contract status India, Indian military upgrades Russia