மாலத்தீவு புதிய ஜனாதிபதியின் பிடிவாதம்... வேறு வழியின்றி பணிந்த இந்தியா
மாலத்தீவு ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, இந்திய ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்பது இறுதியில் நிறைவேற இருக்கிறது.
இந்தியாவுடனான உறவில் விரிசல்
மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக முகமது முய்சு பொறுப்பேற்ற பின்னர் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படத்தொடங்கியது. தேர்தல் வாக்குறுதியாக ஜனாதிபதி முகமது முய்சு அளித்திருந்த, இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்ற முடிவில் அவர் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்தியாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முடிவில் மாலத்தீவில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை வெளியேற்ற இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
மே மாதத்திற்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் மாலத்தீவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 80 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.
ராணுவத்தினர் வெளியேறுவார்கள்
அவர்கள் வெளியேற்றப்படுவதுடன், பதிலுக்கு இருநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாகிகள் அந்த பொறுப்புக்கு வருவார்கள் என்றே கூறப்படுகிறது.
மாலத்தீவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, அண்டை நாடுகளான இந்தியாவும் சீனாவும் கடும் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது. ஆனால் முகமது முய்சு ஜனாதிபதியாக பொறுப்புக்கு வந்த பின்னர் இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
@pa
அத்துடன், ஜனாதிபதி பொறுப்புக்கு வந்த உடன் முகமது முய்சு முதல் அரசுமுறை பயணமாக சீனாவுக்கு சென்றார். மேலும், எதிர்வரும் மார்ச் 15ம் திகதிக்குள் இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற கெடுவும் விதித்தார்.
தற்போது இரு நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுத்த பேச்சுவார்த்தையின் இறுதியில், மார்ச் 10ம் திகதி முதற்கட்டமாக ராணுவத்தினரின் ஒருபகுதி வெளியேறும் என்றும் மே மாதம் 10ம் திகதி எஞ்சிய ராணுவத்தினர் வெளியேறுவார்கள் என்றும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |