எதிரிகளை பதறவைக்கும் வேகத்துடன் இந்தியா உருவாக்கும் BrahMos 2.0 ஏவுகணை
இந்தியாவின் பாதுகாப்பு துறையில் மிகப்பாரிய முன்னேற்றமாக, BrahMos 2.0 எனும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்கத்தில் வேலைத் தொடங்கப்பட்டுள்ளது.
Mach 6 (7,400 km/h) வேகத்தில் பாயக்கூடிய இந்த ஏவுகணை, வெறும் 5 நிமிடங்களில் 640 கி.மீ தூரத்தை கடக்க முடியும், இது எதிரிகளை பதறவைக்கும் அளவிற்கு மிக வேகமானது.
ப்ரஹ்மோஸ் 2.0 ஏவுகணை அப்டேட்கள்:
புதிய ரேஞ்ச்: தற்போதைய 800 கி.மீ. தாண்டி அதிக தூரம் தாக்கும் திறன்.
வானிலிருந்து ஏவுதல்: தற்போது Su-30 MKI பறக்கும் விமானத்தில் மட்டும் ஏவப்படுகிறது. இனி மற்ற விமானங்களிலும் பயன்படுத்த முயற்சி.
BrahMos-NG: எடை குறைந்த புதிய பதிப்பு (1,300 கி.கி). Su-30MK1 விமானத்தில் 4 ஏவுகணைகள் வரை ஏற்ற முடியும்.
படகு மூலமாக ஏவுதல்: சப்மெரினிலிருந்து எச்சரிக்கையில்லாமல் தாக்கும் திறன். உலகில் வெறும் 6 நாடுகள் மட்டுமே இத்தகைய தொழில்நுட்பம் கொண்டுள்ளன.
முழுமையாக தேசியமாக்கம்:
முதலில் வெறும் 7 சதவீதம் ப்ரஹ்மோஸ் உற்பத்தி இந்தியாவில் மட்டுமே நடந்தது. தற்போது 75 சதவீதம் தேசியமாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 84 சதவீத இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் பலம்:
ரஷியாவிடம் இருந்து வாங்கிய S-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்திய எல்லைகளில் மூன்று படைப்பிரிவுகளில் செயல்படுகிறது. இது ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்தது. மீதமுள்ள 2 ஸ்காட்ரன்கள் 2026-க்குள் வரவிருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |