இந்திய அணியை 'யூஸ்லெஸ்' என விமர்சித்த மைக்கேல் வாகன்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், இந்தியாவை 'Useless' என்று விமர்சித்து, மைக்கேல் வாகன் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்ட்..
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி, இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா, முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களில் ஆல் அவுட் நிலையில், தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 432 ஓட்டங்கள் குவித்தது.
ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். பின்னர் ஆடிய இந்தியா மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியதால் 278 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக செத்தேஷ்வர் புஜாரா, 91 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன், அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆட்டம் முடிந்ததை அடுத்து கருத்து தெரிவித்துள்ள மைக்கேல் வாகன், 'இங்கிலாந்து மிக அற்புதமாக இந்தப் போட்டியில் விளையாடியது. இது மிகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று. லார்ட்ஸ் மைதான தோல்விக்குப் பின்னர் இப்படியான ஆட்டத் திறனைக் காட்டுவது அவர்களின் பக்குவத்தைக் காட்டுகிறது.
குறிப்பாக ஜோ ரூட்டின் பக்குவத்தை எடுத்துக் கூறுகிறது. இந்தியா... அவர்கள் இந்த சில நாட்களை மறந்தாக வேண்டும். அவர்கள் மிகவும் யூஸ்லெஸ்ஸாக இருந்துள்ளார்கள்' என்று விமர்சித்துள்ளார்.
அவரின் இந்தக் கருத்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.
Fantastic ruthless performance from England .. that’s as good as it gets .. To do that after Lords shows great character which comes from the Skipper .. India !!!!! A few days to forget .. they really have been useless !!! #ENGvIND
— Michael Vaughan (@MichaelVaughan) August 28, 2021