குயிண்டன் டி காக்கும் இல்லை! இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம்: முன்னாள் வீரர் ஆம்லா
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஆம்லா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று, நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய குயிண்டன் டி காக் திடீரென்று தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
இதனால் அனுபவமிக்க ஒரு வீரரை தென் ஆப்பிரிக்கா அணி இழப்பதால், அந்தணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் முன்னேறுவது கொஞ்சம் கடினம் தான் என்று கிரிக்கெட் வல்லுநர்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஆம்லா, குயிண்டன் டி காக்கும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், தற்போது இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணியில் பவுமா தான் கொஞ்சம் பொறுப்பேற்று, அதிக கவனமுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அவரைத் தொடர்ந்து மார்க்கராம், எல்கர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இருப்பினும் தன்னைப் பொறுத்தவரை இந்த போட்டியிலும் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.