இறுதி ஓவரில் ரிஷப் பன்ட் அதிரடி! சூரியகுமார் யாதவ் அரைசதம்; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டி20 போட்டியில் இந்தியாவை ஜெய்ப்பூரில் எதிர்கொண்டது.
இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய மார்ட்டின் கப்தில் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 70 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைபட்டது. நியூசிலாந்தின் டேரில் மிட்செல் வீசிய அந்த ஓவரில், முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயர் கேட்ச் கொடுத்து வெளியேற, விறுவிறுப்பு அதிகரித்தது.
அடுத்து களமிறங்கிய அக்சாருக்கு மிட்செல் ஒரு ஒய்டு போட, அடுத்த பந்தில் ஒரு சிங்கிள் தட்டினார் அக்சார்.
மூன்று பந்துகளுக்கு 3 ஓட்டம் தேவைப்பட்டநிலையில், அடுத்த பந்தை பன்ட் பவ்வுண்டரிக்கு அடித்து ஆட்டத்தை முடித்தார்.
Exactly the start how we wanted, solid team effort by the boys. Looking forward for the next one.@BCCI 🇮🇳 pic.twitter.com/uZrZsFmIcR
— Rishabh Pant (@RishabhPant17) November 17, 2021
விறுவிறுப்பான கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து இந்தியா அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ஓட்டங்களும், கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.