ஆசிய தடகள போட்டியில் இந்தியாவிற்கு மற்றொரு தங்கம் - அசத்தும் தமிழக வீரர்கள்
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்
தென் கொரியாவின் குமியில், 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நேற்று(26.05.2025) தொடங்கியது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்தியாவில் இருந்து 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் இடம்பிடித்துள்ளனர்.
அசத்தும் தமிழக வீரர்கள்
முதல் நாளில், 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும், ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில், இன்றைய மும்முறை தாண்டுதல் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், 16.09 மீ. தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மேலும், 400 மீ. கலப்பு ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசன், சந்தோஷ் குமார் தமிழரசன், விஷால் மற்றும் ரூபல் சௌத்ரி ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |