இலங்கையின் மூன்று இடங்களில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
இலங்கையில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டனர்
மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் கொழும்புவில் உள்ள தூதரகத்தில் இடம்பெற்றன
இலங்கையில் இந்தியாவின் சுதந்திர தின விழா மூன்று இடங்களில் கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இலங்கை நாட்டில் உள்ள மூன்று இடங்களில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இந்திய தூதரகத்திலும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கொழும்புவில் இந்திய தூதுவர் கோபால் பாக்லே தலைமையில் இந்நிகழ்வு நடந்தது. அவர் இந்திய தேசிய கோடியை ஏற்றி, உரையாற்றினார்.
ඉන්දියාවේ නිදහසේ අභිමානවත් 75වන වසර නිමිත්තෙන් කොළඹ පැවති සැමරුම් උත්සවයේ අවස්ථා... pic.twitter.com/FGdRMVjdzM
— India in Sri Lanka (@IndiainSL) August 15, 2022
அதேபோல், யாழ்ப்பாணத்தில் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ், ஜெய் பாஸ்கரன் தலைமையிலும், கண்டியில் இந்திய துணை தூதர் அதிரா தலைமையிலும் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.